தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஞ்சமி நில மீட்புப் போராளிகள் வாழும் நினைவுத் தூண்! - Memorial pillar for John Thomas, Esquire

காஞ்சிபுரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டது.

காஞ்சிபுரத்தில் தொல் திருமாவளவன் பேட்டி

By

Published : Oct 21, 2019, 10:08 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

காஞ்சிபுரத்தில் தொல். திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாடு அரசானது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல மீண்டும் பஞ்சமி நில மீட்பு குழு அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த நினைவுத் தூண் திறப்பு விழாவில் பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதையும் படியுங்க:'முரசொலி நில ஆதாரத்தைக் காட்டினால் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?' - ஸ்டாலின் மீண்டும் சவால்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details