தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 6, 2022, 6:42 PM IST

ETV Bharat / state

CCTV: லாரியில் இருந்து கழன்ற டயர் மோதிய விபத்தில் சாலையோரம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் நடந்துசென்றவர் மீது லாரியிலிருந்து கழன்ற டயர் மோதிய விபத்தில், சிகிச்சைப்பலனின்றி அவர் உயிரிழந்தார். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழ் படப்பையைச் சேர்ந்தவர் முரளி (45). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 1ஆம் தேதியன்று இரவு படப்பை பஜாரில் மளிகைப்பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் கழன்று ஓடி வந்த கனரக லாரியின் பின்பக்க டயர் ஒன்று எதிர்பாராத விதமாக, முரளியின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு, நிலைகுலைந்து சாலையில் கீழே விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நான்கு தினங்களாக தீவிர சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சி

இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:தனியார் பேருந்து - ஆம்னி வேன் மீது மோதிய விபத்து: பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details