தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு - கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு
கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு

By

Published : Feb 25, 2022, 6:10 PM IST

காஞ்சிபுரம்:கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டப் பிரதிநிதியாக இருந்துவந்தார்.

இவரது மனைவி சைலஜா ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்நிலையில் திமுக பிரமுகர் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதியில் சென்றுள்ளார்.

அரிவாள் வெட்டு

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் பேசுவதுபோல் நெருங்கி திடீரென அரிவாளால் சேகரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சேகரை உறவினர்கள் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:திமுகவில் சங்கமமாகிறதா அதிமுக? - ஐ.பி.க்கு ஓபிஎஸ் சொன்ன 'நச்' பதில்!

ABOUT THE AUTHOR

...view details