தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 1, 2021, 10:06 PM IST

ETV Bharat / state

காவலர் உயிரிழப்பு: காஞ்சிபுரம் காவலர்கள் மத்தியில் சோகம்!

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே இன்று (மார்ச் 1) இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த காஞ்சிபுரம் காவலர்
உயிரிழந்த காஞ்சிபுரம் காவலர்

திருவண்ணாமலை மாவட்டம், அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் வெங்கடேசன் (26). இவர் காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.

இன்று (மார். 01) ஸ்ரீபெரும்புதூரில் தனது பணியினை முடித்துக்கொண்டு வாலாஜாபாத் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தென்னேரி கூட்ரோடு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காவலர் வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதனைசெய்த மருத்துவர்கள், காவலர் வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்த காவலர் வெங்கடேசன் 2017ஆம் ஆண்டுதான் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்குத் திருமணம் ஆகவில்லை. வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details