தெப்ப உற்சவத்தில் எழுந்தருளிய காஞ்சிவரதர்! - Athi Varadar
காஞ்சிபுரம்: உலகப் பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி தென்னேரி ஏரி தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
![தெப்ப உற்சவத்தில் எழுந்தருளிய காஞ்சிவரதர்! varadaraja perumal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10737976-thumbnail-3x2-kanchipuram.jpg)
varadaraja perumal
108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்திப்பெற்றதுமான காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் கண்டருளுவார்.
தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளிய காஞ்சி வரதர்
பின்பு மூன்று முறை தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். தெப்பம் உற்சவத்தைக் காண தென்னேரி கிராமத்தைச் சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டுவந்து தெப்பத்தில் வலம்வந்த வரதராஜ பெருமாளை தரிசனம்செய்து வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:அத்திவரதர் வைபவத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை