தமிழ்நாடு

tamil nadu

ரத்த தானம் வழங்கிய காஞ்சிபுரம் டிஎஸ்பி

By

Published : Dec 20, 2020, 9:00 PM IST

காஞ்சிபுரம்: ஒலிமுஹம்மதுபேட்டை பகுதியில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் பங்கேற்ற காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ரத்த தானம் செய்தார்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி
Kanchipuram DSP donated blood

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சிபுரம் கிளை, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய 22ஆவது ரத்த தான முகாம் ஒலிமுஹம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று (டிச. 20) நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிமேகலை கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கி முகாமினை தொடங்கிவைத்தார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்தனர்.

முன்னதாக ரத்த தானம் அளித்தவர்களுக்கு முறையான ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த வகை, உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட உடல் தகுதி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் ரத்தம் பெறப்பட்டது.

மேலும் ரத்த தானம் அளித்தவர்களுக்கு காஞ்சிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை சான்றிதழ்களை வழங்கினார்.

இதையும் படிங்க:மூன்று பலன்களுடன் வடிவமைக்கப்பட்ட சோலார் மிதிவண்டி! கல்லூரி மாணவர் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details