தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 13, 2019, 4:05 PM IST

ETV Bharat / state

வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அலுவலர்

காஞ்சிபுரம்: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறுகையில்;

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,122 வாக்குச்சாவடிகள் அமையப்பெற்றிருக்கிறது.
  • 91 இடங்களில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • கண்காணிப்பு படக்கருவிகள் மூலம் வாக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. 37 லட்சம் வாக்காளர்களில் 20 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான 1,700 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, பந்தல் வசதி, வாக்களிக்க காலதாமதம் ஏற்பட்டால் தங்க வைப்பதற்கான அறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • வாக்களிக்க வசதியாக வாக்காளர்கள் கொண்டு வர வேண்டிய 12 ஆவணங்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.
  • திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என தேர்தல் ஏற்பாடுகள் குறித்துத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details