உலகப் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் மாதந்தோறும் வரும் ஏகாதசி நாளன்று உற்சவர் வரதராஜப் பெருமாளும், வாரம்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று பெருந்தேவித் தாயாரும் கோயில் வளாகத்திற்குள் வீதியுலா வருவது வழக்கமாக இருந்துவருகிறது.
இந்நிலையில், நேற்று (ஏப். 23) சித்திரை மாதம் முதல் ஏகாதசியும், வெள்ளிக்கிழமையும் இணைந்து ஒரேநாளில் வந்ததால் உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருமலையிலிருந்து கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவ பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.