தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் உணவின்றித் தவிப்பு - உதவிக்கரம் நீட்டிய காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி - kancheepuram dig helps to needy tribes

காஞ்சிபுரம்: ஊரடங்கால் உணவின்றித் தவிக்கும் பழங்குடியின மக்களுக்கு காஞ்சிபுரம் சரக காவல் துறை டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி ஏற்பாட்டின் பேரில், நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

டி.ஐ.ஜி
டி.ஐ.ஜி

By

Published : May 30, 2021, 11:11 PM IST

காஞ்சிபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில், தளர்வுகளற்ற ஊரடங்கால் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி ஏற்பாட்டின்பேரில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த செவிலிமேடு, குறுவிமலை, பிள்ளையார் பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை காவல் துறையினர் நேரடியாகச் சென்று வழங்கினர்.

காவல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்ட பழங்குடியின குடும்பத்தினர் காவல்துறை டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரிக்கு, தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:’கோயம்புத்தூர் புறக்கணிக்கப்படவில்லை’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details