காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குள்பட்ட சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சிறு மாங்காட்டில் கன்னி அம்மன் கோயில் தெருவில் சந்திரசேகர் (30) என்பவர் வசித்துவந்துள்ளார். இவருக்கு மீனா (24) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனது.
சந்திரசேகர் கறவை மாடுகளை வைத்துக்கொண்டு பால் கறக்கும் தொழில் செய்துவந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வேளையில் பால் கறந்துகொண்டு இருக்கும்போது திடீரென அவர் மீது இடி தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்திரசேகரை, சுங்குவார்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.