காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சிக்குள்பட்ட 4ஆவது வார்டு, பட்டூர், வி.எம்.எஸ். நகர் பகுதிகளில் மழைநீர் செல்ல வழித்தடம், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மாங்காடு பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர்.
அலுவலகத்தில் முக்கிய அலுவலர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மழைநீர் செல்ல கால்வாய் வசதிகள் இல்லை. சிறிய மழைக்கே இந்தப் பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடும்.
மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை, இந்தப் பகுதியில் குடிநீர் வராததால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.