காஞ்சிபுரம்: ஒரகடத்திலிருந்து படப்பை நோக்கி கட்டட கலவை கலக்கும் எந்திரம் பொருத்தப்பட்ட கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னே சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சற்று கனரக வாகனத்தை வளைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி எதிர் திசைக்கு கனரக வாகனம் சென்றது.
அந்த திசையில் வந்துக்கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் ஒரு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கமல் (40) மற்றும் அக்காரில் பயணித்த டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சர்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றொரு காரில் பயணித்த ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.