தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு குடிமராமத்துப் பணி திட்டம் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆரம்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் குடிமராத்துப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 ஏரிகள் 9 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
குடிமராமத்துப் பணிகள் மூலம் 8ஆயிரத்து 287 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது மீண்டும் நான்காவது கட்டமாக குடிமராமத்து பணிகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.