தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2021, 9:20 AM IST

ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அறுந்து மேலே விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.

சுங்குவார்சத்திரம் அருகே எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அறுந்து மேலே விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
சுங்குவார்சத்திரம் அருகே எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அறுந்து மேலே விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே எச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (50). இவர், அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய ஜேக்கப், வீட்டின் முன்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பி, எதிர்பாராத விதமாக திடீரென அறுந்து ஜேக்கப் மீது விழுந்தது. இதில் ஜேக்கப் மீது மின்சாரம் பாய்ந்து, உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவலர்கள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் ஜேக்கப் உடல், உடற்கூராய்வு பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க :இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.1500, ஆறு சிலிண்டர் - இது எடப்பாடியின் அப்டேட் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details