தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமெடுத்த நிலையில், மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வார நாள்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்தது.
அத்தோடு, இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாமெனவும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் வழிபாட்டுத் தலங்களில் மரபுகள் மாறாமல் பூஜைகள் மட்டும் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நகரேஷூ காஞ்சி என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் என பழமையும் பெருமையும் வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் நிறைந்து உள்ளன.