எதிர் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் சீமான் நேற்று (மார்ச்.10) பரப்புரை செய்தார்.
அப்போது மக்களிடையே அவர் பேதியதாவது: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணா, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தை முன் வைத்தார். ஆனால் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மொத்தமாக பறிகொடுத்தவர்கள் திராவிடக் கட்சிகள்தான்.
மேலும் ஜிஎஸ்டி வரி வரும் முன்பு கடைகளில் பொருள்கள் விற்பனை நடைபெற்றது. அதன் பிறகு கடை விற்பனைக்கு என வந்துவிட்டது. பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு கொண்டு செல்லும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லும் அளவிற்கு கல்வியின் தரத்தை உலகளவில் கொண்டு செல்வேன்.