தமிழ்நாடு

tamil nadu

'72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரை திமுகவில் இணைத்துள்ளோம்!' - எம்.எல்.ஏ அன்பரசன்

காஞ்சிபுரம்: 'எல்லோரும் நம்முடன்' என்னும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கி 72 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேரை கட்சியில் இணைத்துள்ளோம் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 22, 2020, 10:26 AM IST

Published : Sep 22, 2020, 10:26 AM IST

dmk mla
dmk mla

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்த 'எல்லோரும் நம்முடன்' என்னும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து, புதிதாக இணைய வழியில் திமுகவில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

எம்.எல்.ஏ அன்பரசன் பேட்டி
பின்னர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,'இணையதளம் மூலம் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை தொடங்கி 72 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேரை திமுகவில் இணைத்துள்ளோம். இது திமுக மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை அமைத்திட வேண்டும்' எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details