தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகுந்த இடைவெளியுடன் திமுக இளைஞர்கள் ரத்த தானம்! - corona updates

காஞ்சிபுரம்: கரோனாவை எதிர்த்துப் போராடும் சூழலில், காஞ்சிபுரம் நகர திமுக இளைஞர்கள் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்தனர்.

தகுந்த இடைவெளியுடன் திமுக இளைஞர்கள் ரத்ததானம்!
தகுந்த இடைவெளியுடன் திமுக இளைஞர்கள் ரத்ததானம்!

By

Published : Apr 26, 2020, 2:34 PM IST

உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க. சுந்தரின் அறுவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், கழக மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் நகர திமுக இளைஞரணியினர் பலர் ரத்த தானம் செய்தனர்.

தகுந்த இடைவெளியுடன் திமுக இளைஞர்கள் ரத்த தானம்!

இதற்காக, திமுக இளைஞர்கள் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில், ரத்த தானம்செய்யும் பிரிவில் முகக்கவசங்களுடன் வரிசையாக நின்று ஆர்வத்துடன் ரத்த தானம்செய்தனர். தானம் வழங்கிய திமுக இளைஞர்களுக்கு மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கி, வாழ்த்துக் கூறினர்.

திமுக சார்பில் மளிகைப் பொருள்கள் வழங்கிய காட்சி

இதைப் போல, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் படாளம் சத்யசாய் தலைமையில் பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு திமுக சார்பில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: உழைக்கிறதுதான் நிம்மதியா இருக்கு - ஊரடங்கில் பணியாற்றும் வாட்ச்மேன் தாத்தா!

ABOUT THE AUTHOR

...view details