தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் - நேரில் சென்று ஆய்வு செய்த திமுக எம்எல்ஏ - 54 கோடியே ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம்

காஞ்சிபுரம்: புதிய ரயில் நிலையம் அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் இன்று (டிச.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

dmk mla
dmk mla

By

Published : Dec 10, 2020, 10:54 PM IST

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே சென்னை - பொன்னேரிக்கரை - காஞ்சிபுரம் சாலையில், 54 கோடியே ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 66 தூண்களுடன் திட்டமிடப்பட்டுள்ளஇந்தப் பாலத்திற்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதனோடு, 1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. 2017ஆம் ஆண்டு தொடங்கிய பணி இரண்டு வருடத்திற்குள் முடிப்பதாக திட்டமிடப்பட்டு இன்னும் முடிவடையவில்லை.

இந்நிலையில், ரயில்வே மேம்பால பணிகளை காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேம்பாலத்தின் பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து கேட்டறிந்த அவர், பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என அலுவலரிடம் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிலுவை பூக்கள்!

ABOUT THE AUTHOR

...view details