தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2021, 4:28 PM IST

ETV Bharat / state

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து தேமுதிக நூதன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து தேமுதிகவினர் நூதன ஆர்பாட்டம் நடத்தினர்.

dmdk
dmdk

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது.

தேமுதிக நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக மகளிர் அணியினர் சமையல் எரிவாயு சிலிண்டரை பாடைகட்டி கொண்டுவந்து சாலையில் ஒப்பாரி வைத்தும், கட்சி நிர்வாகிகள் டயர்களை உருட்டி வந்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளின் முக்கிய நிர்வாகிகளும், 300க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மக்களுக்காக பாடுபடும் கட்சி தேமுதிக மட்டுமே: பிரேமலதா விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details