செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை, தாம்பரம் தர்காஸ் சாலை, முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், முடிச்சூர் வரதராஜபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் வடகிழக்குப் பருவ மழையால், பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களை பேரிடர் முன்னெச்சரிக்கைக் குழு முதன்மை கண்காணிப்பாளர் சந்தோஷ்.கே. மிஸ்ரா பார்வையிட்டார்.
அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான் லூயிஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா மற்றும் பொதுப்பணி,நெடுஞ்சாலை,உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.