தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி மீது கார் மோதி தீ விபத்து - காஞ்சிபுரம் மாவட்டம் விபத்தில் தீ பற்றிக் கொண்ட லாரி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் காரும் மோதிக் கொண்டதில் சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தீ விபத்து. துரிதமாக செயல்பட்ட பொதுமக்களால் உயிரிழப்பு தவிர்ப்பு.

நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி மீது கார் மோதி தீ விபத்து
நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி மீது கார் மோதி தீ விபத்து

By

Published : Apr 2, 2020, 11:20 AM IST

பூந்தமல்லியிலிருந்து இண்டேன் நிறுவன சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அரக்கோணம் செல்வதற்காக சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேலூரிலிருந்து சென்னை மார்க்கமாக அmதிவேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரும் லாரியும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்த கார் ஓட்டுனரை போராடி மீட்டு ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி மீது கார் மோதி தீ விபத்து

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வாகனங்களில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். விபத்தில் சிலிண்டர்களில் தீ பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி மீது கார் மோதி தீ விபத்து

விபத்து தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துரிதமாக செயல்பட்ட பொதுமக்களால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டதில் பரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details