தமிழ்நாடு

tamil nadu

பண்டிகை நாள்களில் கவனமாக இருங்கள் மக்களே... அமைச்சர் முன்னெச்சரிக்கை

தீபாவளிப் பண்டிகை காலங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 31, 2021, 7:45 AM IST

Published : Oct 31, 2021, 7:45 AM IST

மா சுப்பிரமணியன்
மா சுப்பிரமணியன்

காஞ்சிபுரம்: பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நேற்று (அக்.31) காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட சாலவாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் அப்போது வழங்கினார். பின்னர் கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பல்துறை முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அமெரிக்காவில், 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 40 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 40 ஆயிரம் பேருக்கும், சிங்கப்பூரில் மூன்றாயிரத்து 500 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் நேற்றிலிருந்து மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, விமானங்களுக்குத் தடை, பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு வகையிலான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் மட்டும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கரோனா வைரஸ் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

அதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்க்கான ஒரே தீர்வு, நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டாமல், தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் தற்போது எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடப்படும் வேளையில், அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று" என்று தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

தொடர்ந்து, ”நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்” என்று கூறிய அமைச்சர், ”புதிதாக திறக்கப்பட உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டு தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் வைத்ததன் எதிரொலியாக, 1,450 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:உடையும் கோத்ரேஜ் குழுமம் - இனி தனித்தனி நிர்வாகம் தான்!

ABOUT THE AUTHOR

...view details