தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 3, 2020, 5:00 PM IST

ETV Bharat / state

பிறந்து 14 நாள்களே ஆன குழந்தை உள்பட 12 பேருக்கு கரோனா!

காஞ்சிபுரம்: பிறந்து 14 நாள்களே ஆன குழந்தை உள்பட 12 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.

பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 12 பேருக்கும் கரோனா
பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 12 பேருக்கும் கரோனா

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் பெண் ஒருவருக்கு ஏற்கனவே கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் பிறந்து 14 நாள்களே ஆன குழந்தை உள்பட ஐந்து பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் பகுதியை சேர்ந்த கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் ஏழு நபர்களுக்கும் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 12 நபர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 40 நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா

ஏற்கனவே இம்மாவட்டதில் ஒன்பது நபர்கள் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க ஒருவர் கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை: உதவிய மாவட்ட ஆட்சியர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details