தமிழ்நாடு

tamil nadu

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் தா. மோ. அன்பரசன்

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 20, 2021, 7:48 PM IST

Published : Aug 20, 2021, 7:48 PM IST

Updated : Aug 20, 2021, 10:23 PM IST

அமைச்சர்  தா. மோ. அன்பரசன்
அமைச்சர் தா. மோ. அன்பரசன்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 1.5 கோடி மதிப்பில் 1000 லிட்டர் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சர் தாமோ.அன்பரசன் திறந்து வைத்தார் .

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ள தரமற்ற கட்டடங்களில் ஐஐடி மூலம் ஆய்வு செய்து தர கட்டுபாட்டுக்கு அனுப்பி, அதன் மூலம் தவறு செய்த அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சர் தா. மோ. அன்பரசன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கரோனா மூன்றாம் அலை அல்ல, எத்தனை அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க :கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் - ராதாகிருஷ்ணன்

Last Updated : Aug 20, 2021, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details