காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்ட உயரம் 20.15 அடியும், நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடி என மொத்த கொள்ளளவு 2641 மில்லியன் கன அடியாகவுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது இன்று மாலை 3 மணியளவில் ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படுமென்றும், ஆகையால் நீர் வெளியேறும் பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி அறிவித்திருந்தார்.