காஞ்சிபுரம்:பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியை காணொலியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வற்கு அண்ணாமலை காஞ்சிபுரத்திற்கு வருகைதந்தார். சிவ பெருமானின் பிரித்திவி (மண்) தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சியைக் காணொலி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
ஜாகிர் உசேன் விஷயத்தில் நாடகம்
இதையடுத்து, செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை, "மாநில அரசு பெயரளவிற்கு மட்டுமே வேளாண்மைக்குத் தனியாக வரவு-செலவுத் திட்ட அறிக்கை போட்டிருக்கிறார்கள், மோடி ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் உரத்திற்குத் தட்டுப்பாடு என்பது எதுவும் ஏற்படவில்லை.
எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் அளிப்பதைத் தவிர்த்து மாநில அரசு உழவர்களுக்காக என்ன செய்திருக்கிறது, உரத்திற்காக மானியம் வழங்கி இருக்கிறார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும், மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
கவர்ச்சிகரமாக வரவு-செலவுத் திட்ட அறிக்கை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள். பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து சமய அறநிலைத் துறை நாடகமாடுகிறது.
பாரபட்சமின்றி திமுகவினர் மீது நடவடிக்கை வேண்டும்