காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்கி எவரும் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.
இது குறித்து செய்தியாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் கூறியதாவது, "தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என 1,896 வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.