தமிழ்நாடு

tamil nadu

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் - ரூ.1.11 லட்சம் அரசு கருவூலத்தில் சேர்ப்பு

உரிமை கோரப்படாத வாகனங்கள் விற்பனை மூலமாகப் பெறப்பட்ட ஒரு கோடி 11 லட்சத்து 29 ஆயிரத்து 624 ரூபாய் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது என காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.

By

Published : Jan 10, 2022, 10:38 PM IST

Published : Jan 10, 2022, 10:38 PM IST

வாகனங்கள் ஏலம்
வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்கி எவரும் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.

இது குறித்து செய்தியாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் கூறியதாவது, "தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என 1,896 வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.

வாகனங்கள் ஏலம்

இந்த ஏலம் விற்பனை மூலமாகப் பெறப்பட்ட ஒரு கோடி 11 லட்சத்து 29 ஆயிரத்து 624 ரூபாய் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மேல் முறையீடு

ABOUT THE AUTHOR

...view details