தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதராஜபுரம் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு - நரசிம்மா ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் வரதராஜபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாக 20 ஆண்டுகள் பழமையான நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று இடிக்கப்பட்டது.

வரதராஜபுரம் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்
வரதராஜபுரம் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்

By

Published : Jan 10, 2022, 7:00 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வரதராஜபுரம் பகுதியில் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. சுமார் 20 ஆண்டுகள் பழமையான இக்கோயில் அடையாறு கால்வாய் நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று (ஜனவரி 10) அலுவலர்கள் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முற்பட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோயிலை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

வரதராஜபுரம் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் உதவி ஆணையர், மணிமங்கலம் காவல் துறையினர் வாக்குவாதம் செய்து எதிர்ப்புத் தெரிவித்த 10-க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில், கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இதையடுத்து ரூ. 4 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 58 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நிலத்தகராறு: வீட்டை அடித்து நொறுக்கிய திமுக நிர்வாகி மீது புகார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details