தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 1:30 PM IST

ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

இருசக்கர வாகன விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு
இருசக்கர வாகன விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பள்ள தெருவில் வசித்து வந்தவர் அந்தோணி எஸ்டர்(45). இவர் ஆரனெரி கிராமத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி தங்கராணி (40). இந்நிலையில், இன்று காலை அந்தோணி எஸ்டர் அவருடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனது கடைக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது திருப்பத்தூர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி பிரசாத் என்பவரின் மகன் அட்சயபிரசாத் (24) அதிவேகமாக ஓட்டிவந்த யமஹா எஃப்இசட் வாகனம் எதிர்பாராத விதமாக அந்தோணியின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தோணி எஸ்டர் , அட்சயபிரசாத் ஆகியோர் பலத்த காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், உயிரிழந்த தங்கராணியின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தோணி எஸ்டரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கும், அட்சயபிரசாத்தை மேல் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன விபத்து; படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details