தமிழ்நாடு

tamil nadu

போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் நண்பரின் இறப்பு குறித்து காவல் துறையினர், அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதால், மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

By

Published : Aug 3, 2021, 3:24 PM IST

Published : Aug 3, 2021, 3:24 PM IST

போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை
போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர், ஆனந்தராஜ். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்றின் குட்டையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் ஆனந்தராஜின் நண்பர்கள் பிரகாஷ், ஆகாஷ், அபி ஆகியோரை வரஞ்சரம் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

உடற்கூராய்வில் வெளியான உன்மை

இந்நிலையில், ஆனந்தராஜின் இறப்புக்குக் காரணமான அவரது நண்பர்களை கைது செய்ய வேண்டும் என கடந்த ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட் 01) நிறைமதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆனந்தராஜின் உடற்கூராய்வு அறிக்கையில் அவர் கொலை செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஊர் மக்களை அழைத்த காவல் துறையினர், நண்பர்களிடம் நடத்திய விசாரணை குறித்தும், உடற்கூராய்வு அறிக்கை குறித்தும் எடுத்துக் கூறினர். இதனைத்தொடர்ந்து இறந்துபோன ஆனந்தராஜின் உடல் நிறைமதி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இளைஞர் தற்கொலை

மேலும், விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆனந்தராஜின் நண்பர்களையும் காவல் துறையினர் விடுவித்தனர். இதில் பிரகாஷ், சொந்த ஊரான நிறைமதிக்குச் செல்லாமல், மேலூரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். காவலர்களின் விசாரணையிலும், கிராம மக்களின் எதிர்ப்பாலும் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல

இது குறித்து தகவலறிந்த சின்னசேலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று, பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: தன்பால் ஈர்ப்பாளர்கள் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details