கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்குள்பட்ட கச்சிராயப்பாளையம் சாலை, சங்கராபுரம் சாலை என முக்கியச் சாலைகளின் ஓரங்களில் கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள், நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் கிடக்கின்றன.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள், அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.