கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவருக்கு குபேந்திரன் என்ற மகன் உள்ளார். சீனிவாசன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை பழக்கமாக வைத்திருந்தார்.
அந்தவகையில், சீனிவாசன் குடிபோதையில் சாலையில் வருவதைப் பார்த்த அவரது மகன், கண்டித்துள்ளார். போதையில் இருந்த அவர், கோபத்தில் மகனை அடிக்க கை ஓங்கியுள்ளார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பொதுவெளி என்று பார்க்காமல் தந்தையை மகன் அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், மதுவில் விஷத்தை கலந்து தற்கொலைக்கு முயன்றார்.