கள்ளக்குறிச்சி: வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டில் திமுக கட்சியினர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 11 இடங்களுக்கு நாளை (பிப்ரவரி 19) வாக்குப்பதிவு, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வடக்கனந்தல் பேரூராட்சியில் 3ஆவது வார்டில் பாமக கட்சி சார்பில் போட்டியிடும் கண்ணன் என்பவர் அந்தப் பகுதியில் வெற்றிபெறும் அளவிற்குச் செல்வாக்குமிக்கவர் எனக் கூறப்படுகிறது.
இதனால் இவரை சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் ஆதரவாளர்கள், வடக்கனந்தல் பேரூராட்சி முக்கிய திமுக பிரமுகர்கள் குதிரை பேரம் விலைபேசி திமுகவில் இணைத்துவிட்டதாகவும், அவரை பாமக வேட்டியை கழற்றிவிட்டு திமுக வேட்டி அணிந்து செல்ல திமுகவினர் நிர்ப்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.