கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வரும் பொதுமக்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பளத் தொகை வழங்கவில்லை.
மேலும் தமிழ்நாடு அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டவும், கழிப்பறை கட்டவும் அனுமதி வழங்கி ஐந்து ஆண்டுகள் ஆகியும், இதுவரை அவர்களுக்கு அதற்கு உரிய தொகை வழங்கவில்லை. இதனால் எடையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பிறகும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.