கள்ளக்குறிச்சி அருகே ஈய்யனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவர் தனது நிலத்தில் சுமார் மூன்று ஏக்கரில் பப்பாளி மரங்கள் நடவுசெய்து பப்பாளி பழத்தை வாரந்தோறும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில் நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக பப்பாளி பழம் பழுத்து மரத்திலே அழுகிய நிலையில் மேலும் புயல் காரணமாக அதிகப்படியான காற்று வீசியதால் பப்பாளி மரங்கள் கீழே விழுந்து நாசமாகின. ஏற்கனவே கரோனா பரவலால் ஏற்றுமதியிலும்,பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.