கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத் துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் 752 பயனாளிகளுக்கு நான்கு கோடியே 95 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி, தாலிக்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.