தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் குற்றங்களில் ஈடுப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! - தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் கைது

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Man arrested for serial offenses
மது பாட்டிகள் திருட்டு

By

Published : Sep 1, 2020, 9:42 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் காவல் துறையினர் ஒருவரை கைதுசெய்தனர்.

இந்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் அது கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் முருகன் (30) என்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது.

மேலும், இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், மதுக் கடைகளை உடைத்து மது பாட்டில்கள் திருடுதல், நகை கடையில் கொள்ளை அடிப்பது, வீடு புகுந்து திருடுவது, உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், இன்று உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசி, குற்றவாலியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details