மாசி, பங்குனி மாதங்களில் கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், பள்ளி விடுமுறை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு மலர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பயிரிடப்பட்ட மலர்களைப் பறிக்க முடியாமலும், பறிக்கப்பட்ட மலர்களை சந்தைக்கு அனுப்ப முடியாமலும் தவித்து வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.