தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விலங்குகள் ஏற்படுத்தும் சேதத்தை வனத் துறையினர் கொடுக்க வேண்டும்' - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி: வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தினால் வனத் துறையினர் அதற்கான நஷ்ட ஈட்டைத்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

kallakurichi-farmer-grievance-meet
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

By

Published : Feb 28, 2020, 4:22 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விளை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் இரவு நேரங்களில் பயிர்களை நாசம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அதனால் தங்களுக்கு வனத் துறையினர் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், மின்சாரத் துறை அலுவலகத்தில் பதிவுசெய்யக் காத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார மோட்டார் சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர்கள் ஸ்ரீகாந்த், சாய் வர்தினியுடன் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

இதையும் படிங்க:விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா: பச்சைத் துண்டுடன் கலந்துகொள்ளும் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details