மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 23 வயது பட்டதாரி பெண் பிரியா பெரியசாமி.
ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றிபெற்று பொறுப்பு வகித்துவருகிறார். இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் ஒப்புதல்பெற்று தளவாட பொருள்கள் வாங்கியுள்ளார்.
அதில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதற்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், பட்டியலின பெண்ணுக்கு ரோலிங் சேரா என்று ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் கேவலப்படுத்தியதாகவும், தொடர்ந்து ஊராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்வதற்கு உண்டான நிதியை பெறுவதற்கு கமிஷன் தொகை கேட்டு கையெழுத்திட மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து பிரியா பெரியசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.