கள்ளக்குறிச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணியாற்றி வரும் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் (59) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கு விடுமுறை விண்ணப்பம் அளிக்க இன்று (ஏப்.1) மாணவி சென்றுள்ளார். அப்போது 4ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம், உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அந்த மாணவி அழுதபடி அவரது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.