கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 100 ஆண்டு பழமைவாய்ந்த ஒதிய மரம் ஒன்று இருந்தது.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த காரணமாக இன்று(டிச.6) திடீரென மரம் சாய்ந்து அதன் அருகில் நின்றிருந்த கார்கள் மீது விழுந்தது.
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மரம் சாய்ந்து இடத்தில் எப்போதும் பொதுமக்கள் பல்வேறு வேலைக்காக நிற்பது வழக்கம்.