தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 5:05 PM IST

ETV Bharat / state

கிணற்றிலிருந்து இளைஞர் சடலமாக மீட்பு! - முன்விரோதத்தால் நேர்ந்த கொலை?

ஈரோடு: முத்துக்கவுண்பாளையத்தின் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதத்தால் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இளைஞர் உடல் சடலமாக மீட்பு  Youth Murder In Erode  Erode Murders  Youth Murder  Erode Death  ஈரோட்டில் இளைஞர் கொலை  கொலை
Youth Murder In Erode

ஈரோடு அருகேயுள்ள முத்துக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனது மனைவியுடன் வசித்துவந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. பிரபு அடிக்கடி அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

அதேபோல், நேற்று முன்தினம் அவர் தனது அண்டை வீட்டுக்காரரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் அண்டை வீட்டுக்காரர் பிரபுவை அடித்துக் கொலைசெய்து ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாள்களாகப் பிரபுவின் உறவினர்கள் அவரைத் தேடிவந்த நிலையில் இன்று அவரின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைசெய்தவர்களைத் தேடிவருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் பெண்ணிடம் 11 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details