தமிழ்நாட்டில் இன்று (மே 08) முதல் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று காலை முதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி, கள்ளிப்பட்டி, புளியம்பட்டி என 25க்கும் மேற்பட்ட நகர்ப்பேருந்துகள் இயங்கின.
பேருந்துகளில் இலவச பயணம்: கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சி! - பெண்கள் மகிழ்ச்சி
ஈரோடு: நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் பகுதியில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்த கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும் மகிழ்சியடைந்தனர்.
கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சி
இதில், பயணித்த பெண் கூலித் தொழிலாளர்கள் இலவச பயணம் என தெரியாமல் நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டனர். காலை நேரத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் தினந்தோறும் பயணச்சீட்டு வாங்கிய நிலையில் தற்போது இலவசம் என நடத்துநர் கூறியதால், பெண்கள் முகமலர்ச்சியுடன் பயணித்தனர்.