தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறுந்து கிடந்த மின் கம்பியை வெறுங்கையால் தொட்ட மூதாட்டி பரிதாப பலி! - former dead

ஈரோடு: விவசாயத் தோட்டத்திற்குள் அறுந்து கிடந்த மின்கம்பியை கையால் அப்புறப்படுத்திய விவசாயி மீது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Shock
Shock

By

Published : Feb 12, 2020, 12:05 AM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் கருப்பாயாள் என்கிற மயிலாத்தாள் வசித்து வருகிறார். இவர் தனது விவசாயத் தோட்டத்தில், முல்லைப்பூ செடி வளர்த்து வருகிறார்.

இதனையடுத்து முல்லைப் பூ, பறிக்க கருப்பாயாள் தோட்டத்திற்குச் சென்ற போது, முல்லைப் பூ செடி மீது மின் மோட்டாருக்குச் செல்லும் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதனை கருப்பாயாள் வெறும் கையால், செடியில் இருந்து அப்பறப்படுத்த முயற்சிக்க, மின்சாரம் தாக்கியது. இதில் கருப்பாயாள் நிகழ்விடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த கருப்பாயாளுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர், உயிரிழந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததினால் தனியாக விவசாயம் செய்து, வாழ்ந்து வந்துள்ளார் என்பது வேதனைக்குரியதாகும்.

ABOUT THE AUTHOR

...view details