தமிழ்நாடு முழுவதும் பருவமழை அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியம்கோம்பை வனப்பகுதியில் சில நாள்களாக மழை பெய்தது.
இதனால் வனப்பகுதியில் பெய்த மழைநீர் அருவியாக கொட்டியது. பல்வேறு அருவிகளில் இருந்து கொட்டிய மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து வனஓடைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புளியம்கோம்பை பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.