ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனஉயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வனஉயிரின பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்பூங்காவில் பார்வையாளர்களைக் கவர்வதற்காக அழகிய பூஞ்செடிகள், யானை சறுக்கு, இளைப்பாறும் குடிகள் போன்ற பொழுபோக்கு அம்சங்கள் உள்ளன. புலிகள் காப்பகத்தில் யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் போன்ற உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், பண்ணாரி வனத்தில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று கம்பி வேலியைச் சேதப்படுத்திவிட்டு பூங்காவில் நுழைந்தது.