தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவோம் - வைகோ - மதிமுக சார்பில் தேர்தல் நிதி பெறும் நிகழ்ச்சி

ஈரோடு: வரும் தேர்தலில் இந்துத்துவ சக்திகளை எதிர்த்து திராவிட இயக்கத்துக்கு வலு சேர்ப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

mdmk party meeting
mdmk party meeting

By

Published : Feb 16, 2021, 6:38 AM IST

மதிமுக சார்பில் தேர்தல் மற்றும் வளர்ச்சி நிதி பெறும் நிகழ்ச்சி ஈரோட்டில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு நாமக்கல் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளிடமிருந்து தேர்தல் நிதியை வைகோ பெற்றுக்கொண்டார்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் முன்பு பேசிய வைகோ, "ஈரோடு மாவட்டம்தான் தேர்தல் வளர்ச்சி நிதியில் பெரும் பங்காற்றியது. பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த முறை நிதி குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மதிமுக மட்டும்தான் தேர்தலுக்கான நிதியை நிர்வாகிகளிடம் இருந்து பெறுகிறது.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவோம். இந்துத்துவா சக்திகளை எதிர்த்து திராவிட இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்" என்று பேசினார்.

இதையும் படிங்க:பிப்.17 முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் - திமுக அறிவிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details