ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வாழையில் ஊடுபயிராகத் தர்பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தர்பூசணி சாகுபடி
6 அடிக்கு 6 அடி இடைவெளியில் வாழை நடவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வாழைக்கன்றுகளின் நடுவே உள்ள இடைவெளி பகுதிகளில் மூன்று மாத காலப் பயிரான தர்பூசணி தற்போது நடவுசெய்யப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.